மேட்டுப்பாளையம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தின்
முன்புறம் அலங்கரிக்கப்பட்டபொங்கல் பானையை வைத்து| பால் பொங்கியதும் அதில் நகர் மன்ற தலைவர்மெஹரிபா பானு. துணைத் தலைவர்அருள் வடிவு மற்றும் நகராட்சி ஆணையர் அமுதா,நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோர் பச்சரிசி, வெள்ளம் ஆகியவற்றை பானையிலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்ட கோலப்போட்டி மற்றும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுநிறைவாக கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *