வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணலில் பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள இரண்டு பணியிடங்களுக்கு, முன்னதாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டது.

முன்னதாக பொது பிரிவினருக்கு ஆதரவற்ற விதவையும், பிற்பட்ட வகுப்பினருக்கு முஸ்லிம் தவிர ஏனைய பொது பிரிவினரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணியிடத்திற்கான நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற நேர்காணலில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர் பணிக்கு நடைபெற்ற நேர்காணலில் 143 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு என கூறப்பட்டிருந்த நிலையில், பொறியியல் மற்றும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *