எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.கிராம மக்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. பிரதான சாலையோரம் கடை இயங்குவதால் நாள் தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் திருமுல்லைவாசல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அருகே உள்ள திருமலைவாசல் வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து அரசு மதுபான கடை முற்றுகை போராட்டம் அறிவி.த்தனர்.
அதன்படி அரசு மதுபான கடையை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.போலிசாரின் தடுப்புகளை மீறி சென்ற போராட்டகாரர்களை கடை வாசலில் போலிசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் இரு தரப்பிற்குமிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கடையை ஒட்டியுள்ள திருமுல்லைவாசல் வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சீர்காழி-திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
போலிசார் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.