முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் 184 வது பிறந்தநாள் விழா….
முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் 184 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்திலுள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்டோர்
நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் நேதாஜி சுவாமிநாதன், வைகை நதி மக்கள் இயக்கம் நிறுவனர் வைகை ராஜன், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர், பென்னிகுக் ஆர்ட்ஸ் அண்ட் ஈவண்ட் நிறுவனர் பென்னிகுக் மணி, கலாம் அறக்கட்டளை நிறுவனர் கலாம் ஜெயக்குமார், மவிசா அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ், பதஞ்சலி யோகாச்சாரியா அர்ஜுன் சிங், அறிவொளி சுடர் அறக்கட்டளை நிறுவனர் சேகர், ஆகியோர் கலந்து கொண்டு பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.