திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது

திருவள்ளுவர் பொதுநல சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் சோ. தெஷ்ணாமூர்த்தி ஏற்பாட்டின் படி, தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே திருவள்ளுவர் தின விழா நடத்தப்பட்டன.

நிகழ்விற்கு, தலைவர் என். ராஜ்குமார் தலைமை வகித்தார். மனோலயம் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளி நிறுவனர் ப.முருகையன், கல்லூரி முதல்வர் (ஓய்வு) க. இருளப்பன், மூத்த நிர்வாகி சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மன்றம் எம்.மோகன் வரவேற்றார்

நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றியும், செங்கமலத் தாயார் அறக்கட்டளை மகளிர் கல்லூரி பேராசிரியர் நா. துரைமாணிக்கம் தமிழாசிரியர் மு.வடிவேல், பேச்சாளர் கார்த்திகைச் செல்வி, காவல் துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு ) நடராஜன் ஜேஸீஸ் நிர்வாகி கமலப்பன், பாரதியார் நற்பணி மன்ற அமைப்பாளர் பூமிநாதன், சமூக ஆர்வாளர் ஆர். விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கவனித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *