அடியத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா! 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் தினத்தன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் அடியத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோயில் முன்பு பக்தர்கள் அம்மனுக்கு கோழி,ஆடுகள் வெட்டியும் பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் வான வேடிக்கை, நாட்டியாலயா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *