பொங்கல் வீர விளையாட்டு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தொடங்கி வைத்தார் …

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கீழத்தெருவில் தை திருநாளாம் தமிழர் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ சியாமளாதேவி இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 50 ம் ஆண்டு பொங்கல் வீர விளையாட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும் குடந்தை ஒன்றிய மேற்கு திமுக செயலாளருமான எஸ்.கே. முத்துச்செல்வன் தலைமை வகித்து ஒலிம்பிக் ஜோதியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன், கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சுவாமிமலை போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பு அறிவழகன் , ஊராட்சி மன்ற உறுப்பினர் தமிழரசன் , மன்றத் தலைவர் ரூபன்ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் விளையாட்டில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவலஞ்சுழி எம் .ஜி .ஆர்.நகர் கீழத் தெருவை சேர்ந்த நாட்டம்மைகள் காசிநாதன்,தர்மராஜ் , செல்வராஜ், குமார் ,கோபி மற்றும் முன்னாள் இந்நாள் மன்ற பொறுப்பாளர்கள், கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *