வலங்கைமான் பாபநாசம் சாலையில், சேனியர் தெருவில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
வேதாரணியம் மற்றும் வழி ஓர கிராமங்கள் பயன் பெறும் விதமாக கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. திட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சாலைகளின் மையப் பரப்பில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது.
குடிநீர் வைப்பானது பாபநாசம்- குடவாசல் சாலை வழியாக வலங்கைமானுக்கு வந்து பின்னர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் செல்கிறது. சாலையின் மைய பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களால் அவ்வப்போது கூட்டுக் குடிநீர் குழாயில் சிறிய அளவில் விற்றல் ஏற்பட்டு பெரிய அளவில் தண்ணீர் வெளியேறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட லாயம் கோல்டன் சிட்டி பகுதி, சேனியர் தெரு பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடந்த சில மாதங்களாக வெளியேறி வந்தது இதன் காரணமாக சாலை பழுது அடைந்ததோடு குடிநீரும் வீணாகி வருகிறது.
எனவே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உழைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது.