அ.சிராஜுதீன்.
மாவட்ட செய்தியாளர்.

கும்பகோணத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம்.

மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் அறிக்கை.

திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி. முத்துகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி
கும்பகோணம் 28 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை
மாலை 3 அளவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வருகை தருகிறார்.

இதற்காக தஞ்சை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருமண பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராகி முதல் முறையாக கும்பகோணம் மாநகருக்கு வருகை தர உள்ளார்.

அதன்படி எடப்பாடி பழனிச்சாமி வருகிற (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி வருகை தந்து ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்த வருகை தருகிறார்.

விழாவில் முன்னாள் அமைச்சரும்,அ.தி.மு.க.அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, மற்றும் தஞ்சை கிழக்கு மாவட்ட,ஒன்றிய, பேரூர், நகர,மாநகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும்
கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எனவே திருமண நிகழ்ச்சிகளில் அனைவரும் பெருமளவு கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *