பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
தென்சருகையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளலார் பற்றி சொற்பொழிவாற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா
தென்சருக்கையில் தொடர்ந்து 10 ஆம் ஆண்டாக தைப்பூச விழா நடைபெற்றது .விழாவிற்கு செல்வராஜ் தலைமை வகித்தார் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார் மனோஜ்,யுவராஜ் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தைப்பூச விழாவில் அருட்பிரகாச வள்ளலார் அறநெறி பற்றி சொற்பொழிவு ஆற்றினர் இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் அறிவழகன் அருட்பா உரையரங்கம் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓமனாதேவி வள்ளலார் வாழ்வியல் தொண்டர் திருநாவுக்கரசு பாராட்டுரை நிகழ்த்தினர்.
மேலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வள்ளலார் சிறப்பு பற்றி பேச்சுப்போட்டி நடைபெற்றது இதில் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவில் அருள்மிகு நடராஜர் அருட்பிரகாச வள்ளலார் சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்