கடமலைபுத்தூர் சுத்த சன்மார்க்க சங்கம் 10 ம் ஆண்டு தைப்பூச பெருவிழா.
1000 பேருக்கு அன்னதானம்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள 109 கடமலைப்புத்தூர் ஊராட்சியில் வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கம் 10 ம் ஆண்டு தைப்பூச பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடமலைப்புத்தூர் சுத்த சன்மார்க்க சங்க பத்தாம் ஆண்டு தைப்பூச பெருவிழா நேற்று காலை 6 மணிக்கு மங்கல இசையுடன்விழா தொடங்கியது.

இதணை தொடர்ந்து கொடியேற்றம் தைப்பூச வழிபாடு நிகழ்ச்சி காலை அன்னதானம் அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் என சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சுத்த சன்மார்க்க சங்க நிலையம் வடலூர் டாக்டர் நா.மகாலிங்கம், சுத்த சன்மார்க்க சங்க நிலையம் வடலூர் சங்கர் வானவராயர்,
ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் டாக்டர் இரா செல்வராஜ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கே.சிவசக்தி அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆர்.சிவகுமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க சங்க தைப்பூச பெருவிழா அன்னதானநிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கடமலைப்புத்தூர் சுத்த சன்மார்க்க சங்க விழா தலைவர்
டி.எஸ்.சதாசிவம்,செயலாளர் எம்.ஆனந்தன்,
பொருளாளர் பி.குணசேகரன்,துணைத் தலைவர்
எம்.புருஷோத்தமன், எம்.பாபு, கே.சித்திரை, சி.ரவி, சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.பக்தவச்சலம், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் கிராம பொது மக்கள்
பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *