மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி !

எட்டயபுரத்தில் பிறந்து
எட்டாத உயரம் எட்டியவன்
பாரதி !

சிட்டுக்குருவிகளின் நேசன்
சின்னச்சாமியின் செல்ல மகன்
பாரதி !

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச் சொந்தக்காரன்
பாரதி !

செந்தமிழ் அன்னையின் புதல்வன்
செல்லம்மாளின் அன்புக் கணவன்
பாரதி !

பரங்கியர் பாரதம் விட்டு
அகலக் காரணமானவன்
பாரதி !

பாரதம் சிறக்க பா பல பாடி
பா ரதம் செலுத்தியவன்
பாரதி !

அச்சம் அறியாதவன்
உச்சம் அடைந்தவன்
பாரதி !

பன்மொழி அறிஞன்
பண் இசைப் பாடல் யாத்தவன்
பாரதி !

மற்ற மொழிகள் அறிந்திருந்தும்
மட்டற்ற தமிழை நேசித்தவன்
பாரதி !

கவிதை நாயகி கண்ணம்மாவை
கண் முன்னே கொண்டு வந்தவன்
பாரதி !

பள்ளியாசிரியராக இருந்தவன்
பள்ளியின் பாடநூலில் இடம் பெற்றவன்
பாரதி !

இயற்கையை ரசித்தவன்
இன்பக்கவி தந்தவன்
பாரதி !

பாப்பா பாடல் பாடியவன்
பாப்பாக்கள் உள்ளம் நிறைந்தவன்
பாரதி !

காலத்தால் அழியாத கவிதைகள்
கல்வெட்டாக பதித்தவன்
பாரதி !

பெண்ணுரிமை பாடியவன்
பேதமையைச் சாடியவன்
பாரதி !

மூடநம்பிக்கைகளை வெறுத்தவன்
பகுத்தறிவைப் பயன்படுத்தியவன்
பாரதி !

உடலால் மறைந்திட்ட போதும்
பாடலால் என்றும் வாழ்பவன்
பாரதி !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *