திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

புலவர்களின் புலவர்
கவிஞர்களின் கவிஞர்
திருவள்ளுவர் !

உலகப்பொதுமறைப் படைத்த
உலகப்பெரும் புலவர்
திருவள்ளுவர் !

பெயரிலேயே திருவைப் பெற்ற
திருவாளர்
திருவள்ளுவர் !

அறநெறிப் போதிக்கும்
அற்புத இலக்கியம் வடித்தவர்
திருவள்ளுவர் !

அவ்வையின் உதவியால்
அரங்கேற்றம் ஆனவர்
திருவள்ளுவர் !

அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர் !

உலகில் அதிக மனிதர்கள்
வாசித்த இலக்கியம் படைத்தவர்
திருவள்ளுவர் !

ஈராயிரம் வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
திருவள்ளுவர் !

மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர்
திருவள்ளுவர் !

வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர் !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *