வலங்கைமானில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி துவங்கியது. பேரணியை வலங்கைமான் தாசில்தார் ரஷ்யாபேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வருவாய்த் துறையினர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா.சிவனேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எஸ். ஆர்.ராஜேஷ், வலங்கைமான்வர்த்தக சங்கம் செயலாளர் ராயல் திருநாவுக்கரசு, பொருளாளர் புகழேந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கோ.சரவணன் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.
பேரணியில் வலங்கைமான் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணி அக்ரஹாரம், கடைத்தெரு, மகா மாரியம்மன் திருக்கோவில், நடுநாரசம் ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பேரணி சென்ற வீதிகளில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் காலையில் டிபனும், பேரணி முடிந்தவுடன் பிஸ்கட் ,தேநீர் வழங்கப்பட்டது.