செய்தியாளர் ச.முருகவேல் கண்டமங்கலம்
இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் புதுச்சேரி சாரதா நகரில் உள்ள அரசு செக்யூரிட்டி அலுவலகத்தில் நடந்தது.
மாநிலச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமைதாங்கினார். புதுவை மாநில தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மக்கள் போராளி பாரத சேவரத்னா டாக்டர் பால.கன்னியப்பன் கலந்துகொண்டு சங்க வளர்ச்சி சம்பந்தமாக கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள் குமார் என்கிற சின்னசாமி, ஞானப்பிரகாசம், புவனேஸ்வரி, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ரமேஷ், மணிபாலன், செபாஸ்டியன், வெற்றிவேல், மனோபாலா, ராஜ்மோகன், அருணாசலம் மற்றும் ரவீந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் சுப்புலட்சுமி, கலாவிசு, ஜான்சிராணி, மங்கலட்சுமி, சசி, கமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்த பட்சம் ஐந்து உறுப்பினர்களை சங்கத்தில் இணைப்பது எனவும், தொடர்ந்து மூன்று கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகளின் பதவிகள் கலாவதி ஆகும் எனவும், புதுச்சேரி மாநிலத்திற்கு சந்தா வசூலிப்பது தொடர்பாகவும், விரைவில் சங்கத்தின் சார்பில் பிரமாண்டமான விழா நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.