தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேவராட்ட போட்டியில் மாநில அளவில் முதலிடம்

அலங்காநல்லூர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில் நடத்திய கலைத்திருவிழா போட்டிகளில் குழு நடனம் தேவராட்ட போட்டியில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று கடந்த 30.01.2023 சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்கான கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேவராட்டம் நிகழ்வு நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் முத்துலெட்சுமி, ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர் -ஆசிரியர் கழகத்தலைவர். பரமசிவம், தெ.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, தலைமையாசிரியர் சந்திரன், உதவிதலைமையாசிரியை தீபா, மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *