பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருப்பாலைத்துறையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது இந்நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது

இதனால் எஸ்பிஜி மிஷன் தெரு காளியம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து குப்பையை கொட்டாமல் இருப்பதோடு குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *