பா. சீனிவாசன் செய்தியாளர் வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கண்ணன் வரவேற்றார்.
தேர்வு எழுதும் முறைகள் பற்றி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் விளக்கினார். தன்னம்பிக்கையுடன் படிக்கும் செயல்பாடுகள் குறித்து கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ் விளக்கி பேசினார்.
மேலும் உடல் ஆரோக்கியம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி விளக்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.