புதுவை மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோயிலை குலதெய்வமாக கொண்டாடும் மக்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவி இருக்கிறார்கள் குறிப்பாக தென்பேர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஆண்டுதோறும் தை மாதம் ஒன்று கூடி இக்கோயிலில் பொங்கல் வைத்து படைப்பது வழக்கம் அதுபோல் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்து இக்கோயிலில் பொங்கல் வைத்து படைத்தார்கள் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன

அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர் பின்னர் மாவிளக்கு போட்டு விளக்கு ஏற்றி சன்னதியில் அம்மனுக்கு முன்னர் வரிசையாக பொங்கல் கூடைகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் மதியம் வாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *