திருவாரூரில் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு அரசாணை 243 ரத்து செய்யக்கோரி டிட்டோ ஜாக் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை கலைதல் மற்றும் கடந்த 12.10 2023 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக. வெளியிட வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீதம் ஆசிரியர்களின் பணி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் 99. சதவீத ஆசிரியர்களை கருத்துக்கு எதிரான அரசாணை 243ஐ ஆதரித்து நடைபெறும் நிகழ்ச்சிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இவைகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, சண்முகவடிவேல் காசிராஜா வீரமணி வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர்

கோரிக்கைகளை விலக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவி தமிழக ஆசிரியர் கூட்டணி அமைப்பு செயலாளர் முரளி ஆகியோர் உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன. முழக்கங்கள் எழுப்பப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *