ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் பனிரெண்டாவது ஆண்டு விழா
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம்/ கலையூரில் இயங்கி வரும் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் பன்னிரண்டாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
தலைமை செஞ்சி பாபு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஜெகன் மற்றும் சீனியர் பிரின்சிபால் முரளி கிருஷ்ணன் பிரின்ஸ்பால் அருள்முருகன் பாலிடெக்னிக் பிரின்ஸ்பால் கார்த்திகேயன் செயலாளர் ஐயப்பன் பொருளாளர் அண்ணாமலை இயக்குனர்கள் ராஜாராம் அங்கவை பாபு அரவிந்த் வெங்கடசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர் செஞ்சி பாபு பேசும்போது பிள்ளைகள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து துறைகளிலும் மாணவ மாணவிகள் பயிற்சி பெற பள்ளி முழு கவனம் செலுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் சாதனை மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார் அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமலும் அல்லது இன்னொரு பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் பிரதமர் பேசிய கருத்துக்களை உதாரணம் காட்டி பேசினார் மேலும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்