மதுரையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2 வது மாநில பொதுக்குழு கூட்டம்..
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2 வது மாநில பொதுக்குழு. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய 2வது மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் கொடியேற்றி வைத்து பொதுக்குழுவை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். மேலும் அரசு ஊழியர் சங்கத்தினுடைய மதுரை மாவட்ட செயலாளர் நீதி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ், மதுரை மாவட்ட தலைவர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய மதுரை மாவட்ட தலைவர் முருகேஸ்வரி வரவேற்றுப் பேசினார், மாநில பொருளாளர் பெரியசாமி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார், மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் பொதுக்குழு அறிக்கை தாக்கல் செய்தார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய மாநில இணைச் செயலாளர் மனோகரன். மாநில துணைத்தலைவர் மணிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அமுதா மதுரை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தீர்மானங்கள் முன்மொழிந்தனர், மாநில இணைச்செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார் இக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1.மதுரை மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட சரண்டர் விடுப்பை திரும்ப விளங்க வேண்டும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும், கால்நடை பராமரிப்பு உதவியாளர் களுக்கு பிற பணியாளர் களுக்கு வழங்கப்படுவது போல் ஆபத்து ஈட்டுப் படி வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.