தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் (50 – 3 பொசிசன் ரீபிள் ஈவென்ட்) போட்டியில் மெல்வினா ஏஞ்சலின் வெள்ளிப்பதக்கமும், ஹித்தேஸ் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
மேலும், தடகளத்தில் பமிலா வர்ஷினி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்கள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்தனர். அப்போது வெற்றி பெற்றவர்களை ஆட்சியர் சங்கீதா பாராட்டினார்.
மதுரை மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.