மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மங்களக்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மங்களக்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாமன்ற 9வார்டு உத்தங்குடி உறுப்பினர் தன்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுப்பாராஜு விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
,மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர் இந்திராணி, ஜான்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் தலைமையாசிரியர் ஆசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார். விழாவில்மாணவ மாணவிகள் பள்ளிமேலாண்மைக்குழு, தன்னார் வலர்கள் மற்றும் மங்களக்குடி ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.