தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது
பள்ளி தலைமை ஆசிரியர் ரெமினாஜுலியட் தலைமை தாங்கினார்.
பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணி வின்சென்ட் வரவேற்புரை வழங்கினார் பள்ளி ஆசிரியர் சுரேஷ்
நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எம். சிவக்குமார்,முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் சுடலை, ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், ஊராட்சி மன்ற தலைவர் பால்விநாயகம்,முன்னாள் ராணுவ வீரர் ராம்குமார்
ஊராட்சி மன்ற துணை தலைவர் வேல்துரை,
ஆகியோர் மூன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாரட்டி மாணவ மாணவிகளோடு பேசினார்.
இந்தநிகழ்வில் காசிநாதபுரம் கல்வியாளர் பரமசிவன்,எஸ் எம் சி தலைவர் கலைச்செல்வி
பி.டி ஏ தலைவர் சந்தானம்,கிளை கழக நிர்வாகி ஆசிர்வாதம் ஒன்றிய கழக பிரதிநிதி ஏசுராஜன்,
சுந்தர், திராவிடமணி, ராஜு , கிராமிய கலை ஆசிரியர் பரமேஸ்வரி கரேத்தே மாஸ்டர் ராஜா, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் பட்டதாரி ஆசிரியர் பிச்சம்மாள் நன்றி கூறினார் விழக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கனகராஜ், கணினி பயிற்றுநர் சுமதி, இளநிலை உதவியாளர் மல்லிகா மாதா ஆகியோர் செய்து இருந்தனர்.