பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்…..

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பு……

தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச.தமிழன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தஞ்சை மேற்கு மாவட்டத்தில் 2024 – தேர்தல் குறித்தும் மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது மேலும் மாற்று கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் விசிக கட்சியில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் 2024 ல் நடைப்பெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலை பூத்கமிட்டி அமைப்பது மற்றும் தேர்தல் பணிகள் செய்வது தொடர்பான ஆலோசனை குறித்தும் தஞ்சை மேற்கு மாவட்ட தொகுதியான பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிளை பகுதிகளில் உள்ள பூத் கமிட்டிகளில் சிறப்பாக பணியாற்றுவது என பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் இனியவன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன்,நில உரிமை மீட்பு மாநிலத் துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன் ,சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலாளர் சிவா. தமிழ்நீதி
விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர்
தமிழ் உழவன் , மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
கலந்துகொண்டு 2024 – தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *