பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி. அசோகன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரியும் , சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறையினரை கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச.தமிழன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன் ,மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், நில உரிமை மீட்பு மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றி வேந்தன், சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் சிவா.தமிழ்நீதி, விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழ் உழவன் ,
அம்மாபேட்டை ஒன்றியசெயலாளர் இனியவன் ஆகியோர் கலந்து கொண்டு கையில் கொடியுடன் கண்டன. முழக்கமிட்டனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் , நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி :
சா. விவேகானந்தன்,
விசிக தஞ்சை முன்னாள் மண்டல செயலாளர்.