வலங்கைமானில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் 7 -ஆம் ஆண்டு கலை இலக்கிய இசை இரவு விழா 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களும், வலங்கைமான் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் கலை இலக்கிய இசை இரவு விழா நிகழ்ச்சி தமுஎகச தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

அந்தி முதல் விடியுல் வரை பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் , இலக்கிய கருத்துகள், கவிஞர்களின் சொற்பொழிவு என நடைபெற்றன.

நையாண்டி மேள இசைக்கு ஏற்ப, கலைஞர்கள் பங்கேற்ற பறையும் பரதமும் நிகழ்ச்சி அங்கிருந்த ஏராளமான மக்களை இசையில் கட்டிப்போட்டது. பறை இசைக்கு ஏற்றார்போல் ஆடுவது ,பாடுவது மற்றும் சிலம்பம் போன்ற சாகச நிகழ்ச்சிகளை கிராமிய கலைஞர்கள் செய்து காட்டியது, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

கலை இலக்கிய இசை நிகழ்ச்சியில் தமுஎகச செயலாளர் அந்தோணிபாஸ்கர், மாநில துணை தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன், மு.சௌந்தரராஜன், ஜீவக்குமார், ஜி.வெங்கடேசன் மற்றும் சினிமா மற்றும் சின்னத்துறையை சேர்ந்த கிராமிய கலை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *