பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல்
ஆலோசனை கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின்
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற
தேர்தல் ஆலோசனை கூட்டம் பல்லாவரம் கான்ஷிராம் பவன் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் & ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர்கள் சித்தாமூர் வழக்கறிஞர்
சே.இளையராஜா பிரபாகரன் ஆகியோர் தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பகுஜன் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரத்தில் எதிர்வருகின்ற நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்தை மாவட்ட குழுவிடம் தெரிவித்தனர்.
பின்னர் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவை மாநில தலைவரிடம் சமர்பிக்கப்படும்
என தீர்மானிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *