பாபநாசம் அருகே மானாஙகோரையில் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து காமாட்சியம்மன் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இல்லம் தோறும் அம்மனுக்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *