பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புளியக்குடி ஊராட்சி, வடக்குதோப்பு புளியக்குடியில் சுமார் 630-குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது குடும்ப அட்டை மூலம்
தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு அந்த பகுதியில் செல்லும் ரயில்வே லைனை கடந்து, சுமார் 3-கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருவதாகவும், இதனால் தங்கள் பகுதிக்கு புதிய பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி புளியக்குடி வடக்கு தோப்பை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து
வந்த நிலையில், அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி, தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையான புத்தூர் பகுதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுவரை பகுதி நேர அங்காடி அமைக்காததை கண்டித்து, புளியக்குடி ஊராட்சி, வடக்குதோப்பு புளியக்குடியை சேர்ந்த கிராம பொதுமக்கள், தஞ்சை நாகை சாலையான புத்தூர் ரோடு அருகில் உணவு சமைத்து உண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.