தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 8/4/24 வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ வழிபாட்டில் முன்னால் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்

இரவு மகாசிவராத்திரி நான்கு கால பூஜையில் கைலாசநாதர்க்கு ஒன்பது வகையான அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு திருமுறைகள் தேவாரம் திருவாசகம் பாடி தீபாராதனைகள் நடைபெற்றது

மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் இரவு முழுவதும் திருமுறைகள் பாடி அதிகாலை நான்காம் கால பூஜை முடியும் வரை இருந்து தரிசனம் செய்து வந்தனர் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் தாமரைகுளம் M. வீர ராஜ் ரியல் எஸ்டேட், M. இராம தண்டபாணி Ex சேர்மன் அவர்கள் சார்பாக வழங்கப்பட்டது குழுவின் சார்பாக ஐந்து முகம் ருத்ராட்சம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *