திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது

கழக அமைப்பு செயலாளரும் மன்னார்குடி முன்னாள் நகர மன்ற தலைவருமான சிவா. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமையேற்று பேசிய முன்னாள் அமைச்சர் இரா .காமராஜ் விடியா திமுக அரசை கண்டித்தும் போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் மார்ச் 12ஆம் தேதி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்கள் ஆணையிட்டு உள்ளார்கள்

மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் மன்னார்குடி கூத்தாநல்லூர் திருத்துறைப்பூண்டி நான்கு நகராட்சிகளிலும் நன்னிலம் பேரளம் குடவாசல் வலங்கைமான் நீடாமங்கலம் கொரடாச்சேரி முத்துப்பேட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகளிலும் நகரக் கழக பேரூர் கழக செயலாளர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தை எழுச்சியாக நடத்தப்பட வேண்டும்

கேட்டுக்கொண்டார் ஆலோசனைக் கூட்டத்தின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகி ராம் மாவட்ட மகளிர் மகளிர் அணி செயலாளர் சுதா அன்புச்செல்வன் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் நகர கழக செயலாளர் திருவாரூர் ஆர்டி மூர்த்தி திருத்துறைப்பூண்டி சண்முக சுந்தர் மன்னார்குடி ஆர் ஜி குமார் கூத்தாநல்லூர் ராஜசேகர் பேரூர் கழக செயலாளர்கள் நன்னிலம் பக்கிரி சாமி குடவாசல் சாமிநாதன் வலங்கைமான் குணசேகரன் நீடாமங்கலம் ஷாஜகான் கொரடாச்சேரி செந்தில்குமார் முத்துப்பேட்டை அன்பழகன் உள்பட கழக நிர்வாகிகள் சார்பணி பொறுப்பாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் வட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *