தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்
தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்வு அம்மன் வீதியுலா மற்றும் காளியாட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மஹா சிவராத்திரியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், அம்மாவாசை மயான சூறையும் நடைபெற்றது. முன்னதாக அம்மன் வீதியுலாவும், காளியாட்டமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலத்தில் துவங்கி திருக்கடையூர் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலய நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து அங்காள பரமேஸ்வரி ம்மன் கோவிலை அடைந்தது. சிறப்பாக நடைபெற்ற காளியாட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.