அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் பெரம்பலூர் அரியலூர் மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது

இதில் அரியலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மாவட்ட தலைவர் சுதாகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்

இந்த அறிமுக கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜான்சி ராணி அவர்களை, மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அறிமுகப்படுத்தி வைத்து திருக்குறள் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

இந்த அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக ஜெயங்கொண்டம் நகர தலைவர் காசி சரவணன் நன்றியுரை வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *