அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் 35,32,538 லட்சம் செலவில் புதிய தானியகளத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் தலைவர் பஞ்சுஅழகு, துணைச் செயலாளர் அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, பிரேமராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், துணைத் தலைவர் ராஜேஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்திகலைமாறன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒப்பந்தகாரர் கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்
சந்தனகருப்பு, தனிச்சியம் மருது, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.