திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைக்கும் தமிழக அரசே போதை பொருட்கள் விற்பனையை கண்டுபடுத்த வேண்டும், நாள்தோறும் நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை ஆட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுபடுத்த வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் அட்சயா முருகன், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏலகிரி பாபு மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *