எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் அதிமுக சார்பில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் புழகத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர்கள் மனித சங்கிலி போராட்டம்.முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்தி தலைமையில் நடைபெற்றது.இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக புதிய பேருந்து நிலையம் எதிரே திமுக ஆட்சியில் தமிழகம் போதை பொருள் தலைநகரமாக மாறிப்போச்சு,போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு துணை போகும் தமிழக அரசை விரட்டுவோம் போன்ற பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ கே சந்திரசேகரன் கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் நற்குணன் சிவக்குமார் சீர்காழி நகர செயலாளர் எல் வி ஆர் வினோத் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்