தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க அரசைக் கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடங்கி வைத்தார் போதைப்பொருள் விற்பனையை தி.மு.க அரசு தடுக்காததைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் அதிமுக சார்பில் கும்பகோணம் மாநகராட்சி, திருப்பனந்தாள், மற்றும் சோழபுரம் பேரூராட்சி பகுதியில்
நடைப்பெற்றது.

அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதி மோகன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ.வி.கே. அசோக் குமார், முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், ஆர்.கருணாநிதி, பேரூர் கழக செயலாளர்கள் ஆசாத் அலி, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதச் சங்கிலி போராட்டத்தை
தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா, கஞ்சா ஆயில் ஸ்டாம்ப், அபின், உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. நகரப் பகுதியில் பயணிகள் குவியம் இடங்களையும், இளைஞர்களையும் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் நிகழ்கால இளைஞர்கள் வாழ்க்கை முற்றிலுமாக சீரழிந்து வருகிறது. இதன் பிறகாவது அரசு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் அரசு அதை செய்யாமல் மவுனம் காத்து வருகிறது.
போதைப் பொருட்களை அரசு தடுக்கும் வரை தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததாலும், இளைஞர்கள் எதிர்காலத்தை கருதியும் போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மனித சங்கிலி போராட்டத்தில் மாநில கைத்தறி பிரிவு செயலாளர் லெனின்,அ.தி.மு.க நிர்வாகிகள்
பத்மகுமரேசன், ராஜீ அறிவொளி,செல்வராஜ், உள்ளிட்ட திராளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *