பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அண்ணா திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர், தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நகர ஒன்றிய அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே கே என் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார்.
மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாட்டில் இளைஞர்களை சீரழித்து வரும் போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகை ஏந்தி கோஷமிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஆண்டிமடம் ஒன்றியம் சார்பாக ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் எம் ஜி ராமச்சந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தங்க பிச்சை முத்து கல்யாணசுந்தரம் எம் ஜி என்கிற ராமச்சந்திரன் விக்கிரம பாண்டியன் ஸ்டில்ஸ் சங்கர் தண்டபாணி தங்கபாண்டியன் வைத்தியநாதன் உட்பட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நான்கு ரோட்டில் இருந்து கைகளை கோர்த்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக கட்சி கொடி ஏந்தியும் திமுக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த மனித சங்கிலி போராட்டத்தின் முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்