தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகளிர் தின விழா
ஆலங்குளம் ஏஜே மஹாலில் வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
.ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமை ஏற்று கேக் வெட்டி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி,வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகி மணிமேகலைஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிர் களுக்கு ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்
இந்த விழாவில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி மகேந்திரன், கலா கண்ணன் ,
மலர் கொடி கோட்டைச்சாமி,முத்துமாரி ரமேஷ், மீனா சந்தனம், வள்ளியம்மாள் முருகேசன்,
பாலசரஸ்வதி முருகையா,ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துலெட்சுமி முருகன், சிவலார்குளம் வள்ளியமாள், கதிர்வேல், குத்தப்பஞ்சான் ஜெயராணிகுமார். கிடாரக்குளம் சாந்தி ஆண்டி, அச்சங்குட்டம் வெங்கடேஸ்வரி முருகேசன்,
மாறந்தை மீனா சுப்பிரமணியன்,மற்றும் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மற்றும் அலுவலகபணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் உதவி குழு பெண்கள்,சத்துணவு பணியாளர்கள்
காலை சிற்றுண்டி திட்டப் பணியாளர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.