மதுரை இலக்கிய மன்றம் சார்பில்
உலக மகளிர் தின விழா…
மதுரை இலக்கிய மன்றமும் ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா செந்தமிழ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மகளிர் சுடரொளி விருது கொடுத்து கௌரவித்தார்.
மேலும் நீதிபதி விக்டோரியா கெளரி பேசுகையில்,
பெண்களின் செயல் ஆக்கத்தை காலத்தின் கட்டாயமாக கூறினார்.
பெண்கள் முன்னேற்றமே உலகத்தின் முன்னேற்றம். பெண்களுக்கு கல்வியோடு கைத்தொழிலையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.
நிறைவாக நலிவடைந்த குடும்பங்களில் உள்ள பெண் குழந்தை களின் கல்விக்கு உதவிட அனைவரும் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விருதுகளை வென்ற அனைத்து பெண் ஆளுமை களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் அவனிமாடசாமி, தலைவர் கண்ணன், ஸ்ரீஅருணாச்சலா கல்வி அறக்கட்டளை அருணாசலம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.