பாபநாசம் அருகே
திருக்கருக்காவூர் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன், ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்..

திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, திருக்கருக்காவூர்வெட்டாற்றின் தென்கரையில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இக்கோயிலின் 40-ஆம் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வெட்டாற்றின் தென்கரையில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஆட்டம் பாட்டங்களுடன்
ஊர்வலமாக, கோயிலுக்கு வந்தன. இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயில் சன்னதியில் பெண்களின் கும்மி ஆட்டங்களுடன், அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கருக்காவூர் நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *