தேவேந்திர பேனாக்கள் தலைவர் T.C.பாலசுந்தரம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பேருந்து நிலையம்,கழிப்பிட வசதி கேட்டு தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மேலும் கூறுகையில்
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மில் பிரசித்திபெற்ற அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த அருள்மிகு மாரியம்மனை தரிசிப்பதற்காக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து தரப்பட்ட மக்களும் ,பக்த கோடிகளும் இறைவழிபட வந்து செல்கிறார்கள் இங்கு விழாக்காலங்களில் லட்சம் பேரும், அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கிறார்கள் .

இந்த கோயிலுக்கு மக்கள் வருவதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பேருந்துகள் சாத்தூரில் இருந்து வந்து செல்கின்றன.இங்கு வரும் அரசு பேருந்துகளும் ,தனியார் வாகனங்களும் நிற்பதற்கு சரியான பேருந்து நிறுத்தமும் ,பேருந்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு சரியான கட்டிட வசதிகள் எதுவும் இல்லை,மேலும் அதைச்சார்ந்த பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளும் எதுவும் இல்லை,இந்த மாபெரும் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது இந்த கோயில் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்தும் பக்தர்களுக்கும்,பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான பேருந்து நிலையமும்,கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்காமல் இருப்பது வருந்தத்தக்க செய்தியாகும்.


ஆகவே மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான பேருந்து எண்ணிக்கைகள் இந்த வழித்தடத்தில் வந்து செல்லவும் ,பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பேருந்து நிலையமும்,கழிப்பிட வசதிகளும் உடனே அமைத்து கொடுத்து பக்த கோடிகளை மகிழ்ச்சியோடு பயனடைய செய்யுமாறு பக்தர்கள் சார்பாகவும்,எங்கள் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என மான்புமிகு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை வெளியிடும்போது தேவேந்திர பேனாக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *