பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா..திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன் ஆலயம் 40-ஆம் ஆண்டு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, வெட்டாற்றில் இருந்து பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி மற்றும் தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *