தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாதனூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன , கடந்த 2016 ஆம் ஆண்டு சிமெண்ட் சிலையால் ஆன அம்பேத்கர் சிலை அமைத்தனர் . இச்சிலை மூன்று மாதமாக திறக்கப்படாமல் இருந்தது , பின்னர் காவல் துறை வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படுத்தினர் .

அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.,

 அதில் , சிமெண்ட் சிலையை அகற்றி முழு உருவ வெண்கல சிலை அமைத்தால் அரசு அனுமதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ரூ பத்து இலட்ச மதிப்பில்  450 கிலோ எடை கொண்ட புதிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புதிய வெங்கல சிலையை அமைத்தன .

பின்னர் வருவாய் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும் சிலை நிறுவப்படாமல் உள்ளதால் , அதனை கண்டித்து இன்று ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கருப்புக் கொடி கட்டி  திடீர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

 போட்டோ விளக்கம் கடத்தூர் அடுத்த தாவனூர் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைக்க அரசு அதிகாரிகள் தராததால், திடீர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *