நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை,ஊத்து, நாலு முக்கு , குதிரை வெட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

அங்குள்ள வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இந்த நிலையில் இன்று காலை அங்கு சென்ற அரசு பேருந்து முன்னால் ஒற்றை யாணை தறிக்கெட்டு சாலையில் ஓடி சென்று கொண்டிருந்தது. இதனை பஸ்ஸில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர் .இதனால் மாஞ்சோலையில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *