வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் நாகை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜி.சுர்ஜித் சங்கர் அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்தவுடன் ஜமாத்தார்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, அனைவரிடம் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜி. சுர்ஜித் சங்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் அளிக்கும்படி கேட்டுக்கொண்டு, அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறினார்கள்.

நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் சா. குணசேகரன், நகர அவைத்தலைவர் ரத்தினகுமார், நகரத் துணைச் செயலாளர் பட்டம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் ஆர். ஜி. பாலா, எஸ். மூர்த்தி, வார்டு செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *