அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிவேலிப்பட்டி ஊராட்சி மாயவரம் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு வாக்கு சேகரிக்க சென்றனர் அப்போது கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக நிர்வாகிகள் தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

உடனே தங்கள் வைத்திருந்த அதிமுக உறுப்பினர் கார்டுகளையும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ், படம் பொறிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அங்கு வருகை தந்த நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் அனைவரும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்த அனைவரையும் நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்று கட்சியில் உடனே இணைத்தனர் இந்த நிகழ்ச்சியின் போது மாநில நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர்கள் தேர்போகிபாண்டி, வழக்கறிஞர் பிரிவு டாக்டர் செந்தில்குமார், சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், கரூர் மாவட்ட செயலாளர் தங்கவேல், செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் குரு முருகானந்தம், மற்றும் காரைக்குடி ரமேஷ், சரவணன், மற்றும் தஞ்சைபாலு, அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
சம்பகுளம் வ.ரகு, இணைச் செயலாளர் மதிவாணன், கோவிலூர் செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *