நாடாளுமன்ற தேர்தல் 2024 மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார்பேரணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர் இப்பேரணியானது, புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி திருவாரூர் அஞ்சல் நிலையத்தில் முடிவுற்றது

அதனைத்தொடர்ந்து அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய தூண்டுபிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பொதுமக்களுக்கு வழங்கினார்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *